புதுக்கோட்டை, நவ.26 - இந்தியாவின் முதல் மாற்றுத்திறனாளி சர்வதேச சதுரங்கப் போட்டி நடுவர் அங்கப்பனை மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பாராட்டினார். புதுக்கோட்டையில் நடைபெற்ற பாராட்டு விழா வுக்கு புதுக்கோட்டை மாவட்ட சதுரங்க செய லாளர் கணேசன் தலைமை வகித்தார். மாநில சட்டத்துறை அமைச் சர் எஸ்.ரகுபதி பாராட்டி னார். முன்னதாக சங்கத்தின் துணைத் தலைவர் அடைக்கப்பன் வரவேற்றார். மாற்றுத்திறனாளி நடுவர் அங்கப்பன் ஏற்புரை வழங்கி னார். இணைச் செயலாளர் ஜெயக்குமார் நன்றி கூறி னார்.