புதுக்கோட்டை, ஜூலை 12 - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மத்தியக்குழு கூட்டம் புதுக்கோட்டை ஏஎன்எஸ் பிரைடு விடுதியில் வெள்ளியன்று (ஜூலை 12) துவங்கியது. தொடர்ந்து ஜூலை 14 வரை இக்கூட்டம் நடைபெறுகிறது.
வெள்ளிக்கிழமை மாலை தொடங்கிய கூட்டத்திற்கு, சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் பி.கே.ஸ்ரீமதி தலைமை வகித்தார். அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி வரவேற்றுப் பேசினார். அரசியல் அறிக்கையை முன்வைத்து சங்கத்தின் பொதுச் செயலாளர் மரியம் தாவ்லே உரையாற்றினார்.
கூட்டத்தில் துணைத் தலைவர்கள் சுபாஷி அலி, சுதா சுந்தர்ராமன், கே.கே.ஷைலஜா (கேரள மாநில முன்னாள் அமைச்சர்) மற்றும் நிர்வாகிகள் சக்திதேவி (கேரள மாநில மகளிர் ஆணையத் தலைவி), என்சிஎஸ்.சுஜாதா, பி.சுகந்தி, தபஷி பிரகாஜ், ராம்பரி தேவி, மல்லு லஷ்மி, சூசன் கோடி, டி.என்.சீமா, அகர்லால் பிரசாத், மது ஹவுர் உள்ளிட்ட மத்தியக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
இக்கூட்டத்தில் முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.