districts

மருத்துவர்கள், செவிலியர்கள் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்

புதுக்கோட்டை, நவ.17 - தமிழ்நாட்டில் காலியாக உள்ள மருத்துவர், செவிலி யர் உள்ளிட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத் துரையின் கோரிக்கையை ஏற்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் பதிலளித்துள்ளார்.

புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற அரசு பல் மருத்துவக் கல்லூரி திறப்பு விழாவில் கலந்துகொண்டு அமைச்சர் பேசியதாவது:

தமிழ்நாடு அரசின் சுகா தாரத்துறை கடந்த 11 ஆண்டு களில் ஒன்றிய அரசின் தேசிய தர உறுதி நிர்ணய திட்ட விருது 556-ஐ வாங்கி உள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டும் முந்தைய ஆண்டும் 487 விருதுகளை பெற்றுள்ளோம். மீதமுள்ள விருது மட்டும்தான் அதிமுக ஆட்சிக்காலத்தில் சுகாதாரத் துறை வாங்கியுள்ளது, இதி லிருந்து அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை எந்த அள வுக்கு இருந்தது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

கடந்த ஆறு ஆண்டு களில் ஒன்றிய அரசின் லட்சயா விருதை தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை 79-ஐ பெற்றுள்ளது. அதில் கடந்த இரண்டு ஆண்டு களில் 50 விருதுகளை பெற் றுள்ளோம். இதிலிருந்து அதி முக ஆட்சியில் சுகாதாரத் துறை இருந்த லட்சணம் தெரிகிறது.

இங்கே கந்தர்வ கோட்டை தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை பேசுகையில், சுகாதாரத்துறை உள்கட்ட மைப்பு வசதியில் இந்தியா விற்கே முன்மாதிரி மாநில மாக தமிழ்நாடு விளங்கு கிறது. அதே நேரத்தில், போதுமான மருத்துவர்கள் இல்லை எனக் குறிப்பிட் டார். அவரது கோரிக்கை நியாயமானது.

தமிழ்நாட்டில் 1021 மருத்துவர்கள், 983 மருந்தா ளுநர்கள், 1066 சுகாதார ஊழியர்கள், 2022 கிராமப்புற செவிலியர்கள் காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களை பொறுத்தவரை 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தன. தற்போது அது முடிவுக்கு வந்து, நீதிபதி கள் தீர்ப்பை ஒத்திவைத் துள்ளனர். வருகிற ஒரு வாரத்தில் தீர்ப்பு அரசுக்கு சாதகமாக வரும் என்று எதிர்பார்க்கிறோம். அவ் வாறு வந்தவுடன் 20 நாட் களுக்குள் அனைத்துப் பணியிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

“போலி மருத்துவர்கள்  மீது  நடவடிக்கை எடுக்கப்படும்”

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “சென்னை மாநகராட்சி ஆணையரின் உதவியாளர் காயமடைந்த விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உண்மை தெரியாமல் பேசுகிறார். அவர் இது போன்று செயல்படுவது அவரின் அறியாமையையும் நிர்வாக திறமையின்மையையும் காட்டுகிறது.

அதிமுக ஆட்சிக்காலத்தில் 120 மருத்துவமனைகள் எச்ஆர் என்ற மருத்துவப் பணிகளை உருவாக்காமல் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இது தரம் உயர்த்தியதற்கான அர்த்தம் அல்ல; பெயர்ப்பலகை மட்டுமே மாட்டிக் கொள்ள முடியும்.இரண்டரை ஆண்டுகளாக தற்போதைய ஆட்சியாளர்கள் மருத்துவர்களை நியமிக்கவில்லை என்ற தவறான தகவலை முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்லி வருகிறார். அதுபோல தான் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் உள்ள அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி விட்டு மருத்துவர்களை நியமிக்காமல் விட்டுவிட்டார். 

இந்நிலையில்தான் அந்த மருத்துவமனைக்கு மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என அப்பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது எங்கள் கவனத்திற்கு வந்த பிறகு, தற்போது அங்கு மருத்துவப் பணியிடத்தை உருவாக்கி மருத்துவர்கள் நியமிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

டிஎன்பிஎஸ்சி-யில் 10250 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் மருத்துவத் துறையில் காலியாக இருந்த தட்டச்சர், உதவியாளர் உள்ளிட்ட 986 பணியிடங்கள் நிரப்பப்பட்டு, அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பணி நியமன ஆணை வழங்கினார்.

போலி மருத்துவர்களை தொடர்ந்து கண்காணித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் மூன்று மருத்துவமனைகள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளன. போலி மருத்துவர்கள் குறித்து தகவல் கிடைத்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.