புதுக்கோட்டை, மார்ச் 24 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை வடக்கு ஒன்றிய அலுவலகத் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஜி.பன்னீர்செல்வம் தலை மை வகித்தார்.
அலுவலகத்தை மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் முன்னி லையில், கந்தர்வகோட்டை சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை திறந்து வைத்தார். அலுவலகத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யா உருவப் படத்தை மாநிலக் குழு உறுப்பினர் மா. சின்னதுரை எம்எல்ஏ., முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆர்.கருப்பையா படத்தை மாவட்டச் செயலாளர் எஸ்.கவி வர்மன், முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.லெனின் படத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ராமையன், முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.செல்வராஜ் படத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சங்கர், முன் னாள் ஒன்றியச் செயலாளர் பி.வீராசாமி படத்தை மாவட்டக் குழு உறுப்பினர் டி.சலோமி ஆகியோர் திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.மதியழகன், ஒன்றியச் செயலாளர்கள் வெ.ரெத்தினவேல் (கந் தர்வகோட்டை தெற்கு), எஸ்.கலைச் செல்வன் (குன்றாண்டார்கோவில்), டி.லெட்சாதிபதி (புதுக்கோட்டை) மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.பாலசுப்ரமணியன், போக்குவரத்து ஊழியர் சம்மேளன மண்டலத் தலைவர் எஸ்.கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.