districts

img

நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான ‘‘எண்ணும் எழுத்தும் பயிற்சி’’

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டார வள மையத்திற்குட்பட்ட தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான ‘‘எண்ணும் எழுத்தும் பயிற்சி’’ ஜன.2, 3, 4 தேதிகளில் நடைபெற்றது. பயிற்சியினை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் மாரியப்பன் தலைமையேற்று நடத்தினார். வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர் நல்லநாகு முன்னிலை வகித்தார்.