districts

பொன்னமராவதியில் புதிய பேருந்துகளை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்

பொன்னமராவதி, மே 26- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமரா வதியில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பொன்னமராவதியிலிருந்து திருச்சி வரை புதிய வழித்தட பேருந்துகளை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி துவக்கி வைத்தார்.  மேலும் பொன்னமராவதி பேரூராட்சிக் குட்பட்ட சிவன் கோவில் மேல வீதி, வடக்கு வீதி பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் கல்தளம் மற்றும் வடிகால் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பொதுமக்களிடையே மஞ்சள் பை பயன்பாடு தொடர்பான விழிப்புணர்வை ஏற் படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு மஞ்சள் பைகளை வழங்கி மஞ்சள் பையின் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.  நிகழ்வில் தனி மாவட்ட வருவாய் அலுவ லர் சரவணன், துணை மேலாளர் சுப்பு, வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, ஒன்றிய குழு தலைவர் சுதா அடைக்கலமணி, பேரூராட்சி தலைவர் சுந்தரி அழகப்பன், செயல் அலுவலர் கணேசன், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

;