districts

img

கீரமங்கலம் பேரூராட்சி 15 ஆவது வார்டு சிபிஎம் வேட்பாளர் பாலமுருகனை ஆதரித்து எம்.சின்னத்துரை எம்எல்ஏ பிரச்சாரம்

புதுக்கோட்டை, பிப்.15 - கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக  தேர்தல் நடத்தாமல் நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகத்தை முடக்கி வைத்த அதிமுகவுக்கு இந்தத் தேர்த லில் மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றார் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னத்துரை. திமுக தலைமையிலான மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணியில் புதுக் கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேரூ ராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆத ரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக் குழு உறுப்பினரும், கந்தர்வகோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான எம்.சின்னத் துரை திங்கள்கிழமை தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.  அப்போது அவர் பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளில் முந்தைய அதிமுக அரசு சாலைகளை முறை யாக சீரமைக்கவில்லை. அவ்வாறு சீரமைக்கப்பட்ட சில சாலைகளும் சில மாதங்களிலேயே குண்டும், குழியு மாக பழுதடைந்துவிட்டன. கடந்த 2018-ல் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் கடனை தள்ளுபடி செய்ய கடந்த அரசு மறுத்துவிட்டது. கொ ரோனா நோய்த்தொற்று முடக்கக் காலத்திலும் மக்களை கடும் அவதிக்கு உள்ளாக்கியது அதிமுக அரசு. இங்கே கீரமங்கலம் பேரூ ராட்சிக்குட்பட்ட 15 ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக ஞா.பாலமுருகன் போட்டியிடுகிறார்.

தேர்தலில் வாக்கா ளர்களுக்கு இடதுசாரி வேட்பாளர்கள் ஒரு பைசா காசுகூட கொடுத்ததில்லை. கொடுக்கப் போவதுமில்லை. ஆனால் பொதுமக்களுக்காக அரசு வழங்கும் திட்டங்கள் அனைத்தையும்  முறையாக உரியவர்களிடம் சென்ற டைவதை இடதுசாரி மக்கள் பிரதிநிதி கள் உறுதி செய்வார்கள். அதற்காக யாரிடமும் ஒரு பைசா காசுகூட பெறு வதில்லை. தமிழகத்தில் வலிமையான அரசாக மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்படுகிறது. இந்தியாவை பாதுகாப்பதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக செயல்பட்டு வருகிறது. கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக  தேர்தல் நடத்தாமல் நகர்ப்புற உள்ளாட்சி  நிர்வாகத்த முடக்கி வைத்தது அதிமுக அரசு. அதிமுகவுக்கு இந்தத்  தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றார். பிரச்சாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ். கவிவர்மன், திமுக நகரச் செயலாளர் சிவக்குமார், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர்கள் எல்.வடிவேல், பி. சுசீலா, எஸ்.பாண்டிச்செல்வி, திரு வரங்குளம் மேற்கு ஒன்றியச் செயலா ளர் எஸ்.மணிவண்ணன் உள்ளிட்ட பலர்  பங்கேற்றனர். பிரச்சாத்தில் விழுதுகள்  குழுவினரின் கலை நிகழ்ச்சியும் நடை பெற்றது.