districts

img

கறம்பக்குடி பேரூராட்சியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பிரச்சாரம்

புதுக்கோட்டை பிப்.16 - புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக் குடி பேரூராட்சிக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும் என  சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வாக்குறுதி அளித்தார்.  புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சிக்குட்பட்ட 15  வார்டுகளிலும் மதசார்பற்ற முற்போக்கு  கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி புதன்கிழமை தீவிர பிரச்சாரம் மேற் கொண்டார். அவர் பேசுகையில், கறம்பக்குடி பேரூராட்சியில் நிலவி வரும் குடிநீர் பிரச்சனையை நன்கு அறிவேன். நீங்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச்  செய்வதன் மூலம் இந்த பகுதிக்கு ஏராளமான அரசு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடியும். குறிப்பாக கறம்பக்குடி பேரூராட்சி பகுதிகளுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை விரைவில் கொண்டு வந்து  இப்பகுதி மக்களின் குடிநீர் பிரச்ச னையை தீர்த்து வைக்க முடியும். கறம்பக்குடி வீதிகளில் உள்ள தோரண  வாய்க்கால்களை சரி செய்து மழைக் காலங்களில் நீர் தேங்காமல் இருக்க நட வடிக்கை எடுக்கப்படும்.  எனவே, மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்த்து வைக்க வாக்கா ளர்கள் அனைவரும் திமுக தலைமை யிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என்றார்.  பிரச்சாரத்தில் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை, திமுக வடக்கு மாவட்ட  பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டி யன், ஒன்றிய செயலாளர் வி.முத்து கிருஷ்ணன், நகர செயலாளர் உ.முரு கேசன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ராமையன், த.அன்ப ழகன், மாவட்ட குழு உறுப்பினர் எஸ். பொன்னுச்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற் றனர்.