புதுக்கோட்டை, பிப்.21 - புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்ற திருமண விழாவில் தமிழறிஞர்களின் படைப்பு களை மாட்டுவண்டிகளில் கொண்டு வந்த வாட்ஸ்அப் குழுவினர். தமிழகத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்தோரை கொண்டு “தமிழினி” வாட்ஸ்அப் குழு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கவிஞர் தங்கம் மூர்த்தியின் இல்லத் திருமண விழா புதுக்கோட்டையில் ஞாயிற் றுக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு தமிழினி வாட்ஸ்அப் குழுவின் ஒருங்கி ணைப்பாளர் டாக்டர் வீ.சி.சுபாஷ்காந்தி தலைமையில் 9 மாட்டு வண்டிகளில் கல்யாண சீர் கொண்டு வரப்பட்டது. ஒவ்வொரு வண்டியிலும் திருவள்ளுவர், ஒளவையார், இளங்கோவடிகள், கம்பர், பாரதியார், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ண தாசன், வாலி ஆகிய தமிழ றிஞர்களின் படங்கள் மற்றும் அவர்களது படைப்புகள் ஏற்றிக் கொண்டு வரப்பட்டன. மண்டப வாசலில் இறங்கி இவற்றோடு, மா, பலா, வாழை ஆகிய முக்கனி களோடு தட்டுகளில் வைத்து சீர்வரிசை அளிக்கப்பட்ட இந்நிகழ்வு அனைவரின் கவ னத்தையும் ஈர்த்தது.