பொன்னமராவதி, ஜூன் 25 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் குறித்த ஊராட்சித் தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக் கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். இதில் கலந்து கொண்ட கிராம ஊராட்சி ஆணையர் ஆயிஷா ராணி கூறுகையில், “கலைஞரின் கனவு இல்லம் வீடு கட்டும் திட்டம் 2024 ஜூலை முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக குடிசை வீடுகள் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. இதில் விடுபட்டவர்கள் குடிசை வீட்டில் வசித்து வந்தால் அவர்களை ஊராட்சித் தலைவர்கள் தேர்வு செய்யலாம்.
அரசு இடத்தில் குடிசை வீட்டில் குடியிருந் தால் அவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆண்டு முழுவதும் குடிசை வீட்டில் வசிப்பவர்களுக்கு, கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் வீடு வழங்கப்படும். வருங்கா லங்களில் சீட்டு வீடு, ஓட்டு வீடு ஆகியவற்றில் வசிப்பவர்களுக்கும் அரசு வீடு வழங்கும்.
ஏற்கனவே பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் ஆகிய திட்டங்களில் கணக்கு எடுக்கப்பட்டு உள்ளது. இதில் பெயர் உள்ளவர்களுக்கு விரை வில் வீடு கட்ட அரசாணை வழங்கப்படும்.
இப்போது செயல்படுத்தப்பட்டுள்ள கலைஞரின் கனவு இல்லத்திற்கு வீடு கட்ட தகுதியான பய னாளிகளை தேர்வு செய்ய ஊராட்சித் தலைவர் கள் முன்னுரிமை வழங்க வேண்டும். வீடு இல்லாதவர்களுக்கும், சீட்டு வீடு மற்றும் ஓட்டு வீட்டில் வசிப்போருக்கும் வீடு கட்ட வழிவகை செய்ய வேண்டும்” என்றார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முன்புபோல அனைவருக் கும் வேலை வழங்க வேண்டும். 15 ஆவது நிதி குழு மானிய திட்ட நிதியில் ஊராட்சிகளுக்குத் தேவையான பணிகளை எடுத்து செய்ய நட வடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சித் தலை வர்கள் வலியுறுத்தினர்.
அதற்கு பதிலளித்த ஆணையர், “100 நாள் வேலை திட்டத்தில், இனி பணியாளர்கள் செய்யும் வேலையினை அளந்து அதற்கேற்ற ஊதியம் வழங்கப்படும். நன்றாக வேலை செய்யும் பணியாளர்களுக்கு மட்டுமே பணிகள் வழங்க வேண்டும். ஜூன் 27 அன்று முதல் அனைத்து ஊராட்சிகளிலும் நூறு நாள் வேலைத் திட்டம் தொடங்கப்படும். 15 ஆவது நிதி குழு மானிய திட்டத்தில் அரசு சொல்லும் பணி களையே மேற்கொள்ள வேண்டும்” என்றார்.