புதுக்கோட்டை, ஜன.5- இஸ்ரோ சென்று திரும் பிய புதுக்கோட்டை ஸ்ரீவெங் கடேஸ்வரா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவனுக்கு வியாழக்கிழமையன்று பள்ளியின் சார்பில் வர வேற்பு அளிக்கப்பட்டது. இஸ்ரோ விண்வெளி மையம் மற்றும் ஹார்ட்புல் னஸ் இணைந்து நடத்திய இளம் விஞ்ஞானி விருது- 2022 போட்டியில் தமிழக அளவில் சிறந்த கண்டு பிடிப்புக்காக தேர்வுசெய் யப்பட்ட ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி 10-ஆம் வகுப்பு மாணவர் ஏ.ஸ்ரீஹரி இஸ்ரோ விண்வெளி மையம் அமைந்துள்ள மகேந்திர கிரிக்குச் சென்று இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் விளக்கம் பெற்றார். இஸ்ரோ பயணம் முடிந்து வந்த மாணவர் ஏ.ஸ்ரீஹரியை பள்ளியின் முதல்வர் தங்கம் மூர்த்தி மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மாலை யணிவித்து வரவேற்றனர்.