districts

கோட்டைப்பட்டிணத்தில் வாரச்சந்தை துவக்கம்

அறந்தாங்கி, ஜன.5- புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம்  கோட்டைப்பட்டிணத்தில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று புதிய வாரச்சந்தை திறந்துவைக்கப்பட்டது. பொதுமக்களின் நீண்டகால கோரிக்கை அடிப்படை யில் கோட்டைப்பட்டிணம் பகுதியில் சந்தை அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று புதிய வார சந்தை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. ரூ.10 லட்சம் செல வில் சந்தை கூடம் மற்றும் கழிவறை உள்ளிட்ட அடிப் படை வசதிகள் அமைக்கப்பட்டன.  இந்நிலையில், வார சந்தையை மணமேல்குடி ஒன்றி யக் குழு தலைவர் பரணி கார்த்திகேயன் திறந்து வைத்தார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அக்பர்அலி, மண மேல்குடி திமுக வடக்கு ஒன்றியச் செயலாளர் சக்தி ராமசாமி, மாநிலச் செயற்குழு உறுப்பினர் கலைமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.