districts

img

சாலை, குடிநீர் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் கறம்பக்குடி சிபிஎம் வேட்பாளர் பி.வீரமுத்து வாக்குறுதி

புதுக்கோட்டை, பிப். 5 - தேர்தலில் வெற்றி பெற்றால் சாலை,  குடிநீர் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுவேன் என வாக்கு றுதி அளித்தார் கறம்பக்குடி 9 ஆவது வார்டு  சிபிஎம் வேட்பாளர் பி.வீரமுத்து. திமுக தலைமையிலான மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணியில் கறம்பக் குடி பேரூராட்சியில் 9 ஆவது வார்டு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக் கப்பட்டது. இதில் கட்சியின் கறம்பக்குடி வடக்கு ஒன்றியச் செயலாளர் பி.வீர முத்து போட்டியிடுகிறார். இந்நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் வீரமுத்துவின் வேட்பு மனுவை அதிகாரிகள் ஏற்றுக்கொண்ட னர். இதனைத் தொடர்ந்து தனது வார்டுக்கு  உட்பட்ட பகுதிகளில் கூட்டணிக் கட்சியின ருடன் வேட்பாளர் பி.வீரமுத்து வீடு வீடாகச்  சென்று தீவிர வாக்குகள் சேகரித்தார். வேட்பாளருடன் காங்கிரஸ் கட்சியின் வட்டாரத் தலைவர் கலியமூர்த்தி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ரா மையன், த.அன்பழகன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.பொன்னுச்சாமி, வி.ரெத்தினவேல் உள்ளிட்டோர் உடன் சென்றனர். வேட்பாளருக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். பழுதடைந்த சாலைகளை சீரமைக்கவும், குடிநீர் பிரச்ச னையைத் தீர்க்கவும் முன்னுரிமை கொ டுத்து பாடுபடுவேன் என வாக்குறுதி அளித் தார்.