districts

img

அரசு நலத்திட்டங்கள் முறைகேடு இல்லாமல் மக்களுக்குச் சேர சிபிஎம் வேட்பாளரை ஆதரியுங்கள் கந்தர்வகோட்டை எம்எல்ஏ எம்.சின்னத்துரை பிரச்சாரம்

புதுக்கோட்டை,  பிப்.11 - அரசு நலத்திட்டங்கள் அனைத்தும் முறையாக ஊழலுக்கு இடமின்றி மக்க ளுக்கு சேர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பா ளரை ஆதரிக்க வேண்டு மென கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னத் துரை வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு  கூட்டணியில் புதுக் கோட்டை மாவட்டம் அன்ன வாசல் பேரூராட்சி 1 ஆவது  வார்டு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. வேட்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஜி.நாக ராஜன் போட்டியிடுகிறார். அவருக்கு வாக்கு கேட்டு கட்சியின் மாநிலக்குழு உறுப் பினரும், கந்தர்வகோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான எம். சின்னத்துரை வியாழக் கிழமை வீடு வீடாகச் சென்று  வாக்குகள் கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்தின் போது எம்.சின்னத்துரை எம்எல்ஏ கூறுகையில், “சட்டமன்ற, நாடாளுமன்ற பொதுத் தேர்தல்களைப் போல உள்ளாட்சித் தேர்தல் இருக் காது. அதிலும் நகர்ப்புற  உள்ளாட்சி தேர்தல் மிகக் குறுகிய எல்லைக்குள் இருக்கும். இங்கு போட்டியி டும் வேட்பாளர்கள் ஒரே  தெருவுக்குள், அடுத்தடுத்த  வீடுகளில்கூட இருப்பார் கள். அதனால் யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பம் உங்களுக்கு இருக்கும். நீங்கள் வாக்களிக்கும் முன்பாக அந்த வேட்பாளர் களின் கடந்த கால செயல்பா டுகளை எடை போட்டு பார்க்க வேண்டும்.

அப்படி பார்க்கும் போது இந்த வார்டுக்குள் போட்டியிடும் நாகராஜைப் பற்றி எண்ணிப்  பாருங்கள். உங்களுக்காக அவர் எத்தனை போராட்டங் களை தலைமையேற்று நடத்தியிருப்பார். உங்களுக் காக எத்தனை அலுவலகங் களின் படிகளில் ஏறி குறை களைத் தீர்த்து இருப்பார். சமீபத்தில்கூட அரிமளம் பேரூராட்சிக்கு நூறுநாள் வேலைத் திட்டத்தை கொண்டு வர வலியுறுத்தி ஆயிரத்திற்கும் அதிகமா னோரை திரட்டி அவர் நடத்திய போராட்டத்தை உங்களால் மறுக்க முடியுமா? எனவே, எந்நேரத்திலும் களத்தில் நின்று போராடும் வேட்பாளர் ஜி.நாகராஜூக்கு உங்கள் வாக்குகளை பெருவாரியாக அளித்து அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் இந்தப் பகுதிக்கு ஏராளமான அரசு  நலத்திட்டங்களைக் கொண்டு வருவார். எந்தவித மான ஊழல் முறைகேடு களுக்கும் இடமளிக்காமல் முழுமையாக திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க உறுதுணையாக இருப்பார்.  

எனவே, அரிமளம் பேரூ ராட்சியில் 1 ஆவது வார்டு  வேட்பாளராகப் போட்டி யிடும் ஜி.நாகராஜூக்கு அரி வாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்றார். வாக்கு சேகரிப்பின் போது, திமுக திருமயம் ஒன்றியச் செயலாளர் பொன்.ராமலிங்கம், பொன்னமராவதி ஒன்றியச் செயலாளார் ஏ.அழகு, திமுக பொதுக்குழு உறுப்பி னர் சுப்பிரமணியன், சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கர், சு.மதியழகன், எஸ். ஜனார்த்தனன், ஒன்றியச்  செயலாளர் ஆர்.வி.ரா மையா, மாவட்டக்குழு உறுப்பினர் அ.மணாவாளன் மற்றும் ஒன்றியக் குழு  உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்ற னர்.

;