புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் காரையூர் அம்மன் கோவில் வீதியில் சுகாதார சீர்கேட்டை உருவாக்கும் குப்பை கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலையில், ஊராட்சி மன்றத் தலைவர் முகமது இக்பால், வட்டார வளர்ச்சி அலுவலர் குமரன் ஆகியோர் முன்னிலையில் ஊராட்சி பணியாளர்கள் குப்பை கழிவுகளை அகற்றினர்.