districts

img

சிபிஎம் பகுதி கிளை சார்பாக நிதியளிப்பு கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா ஏம்பலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதி கிளை சார்பாக நிதியளிப்பு கூட்டம் நடைபெற்றது. ஏம்பல் கிளை செயலாளர் நாகப்பன் தலைமை வகித்தார். முருகன் வரவேற்று பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சங்கரிடம் கிளை சார்பாக நிதி வழங்கப்பட்டது. கட்சி வளர்ச்சி நிதியைப் பெற்று கொண்டு சங்கர் சிறப்புரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டக் குழு உறுப்பினர் சி.சுப்பிரமணியன்,  தாலுகா செயலாளர் முருகேஷ் உள்ளிட்டோர் பேசினர்.