districts

img

முன்னாள் எம்எல்ஏ எஸ்.ராஜசேகரன் காலமானார்

புதுக்கோட்டை, ஜன.31 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான தோழர் எஸ்.ராஜசேகரன் (82) உடல்  நலக்குறைவால் புதன்கிழமை கால மானார். அவரது இறுதி நிகழ்ச்சி வியாழக்கிழமை (பிப்.1) நடைபெறு கிறது.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் 60 ஆண்டுகளுக்கு மேலாக பொது  வாழ்க்கையில் ஈடுபட்டவர். ஆலங்குடி தொகுதியின் முன்னாள் சட்டப்பேர வை உறுப்பினர், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழர்  எஸ்.ராஜசேகரன் உடல் நலக்குறை வால் புதன்கிழமை காலமானார்.  

தோழர் எஸ்.ராஜசேகரன் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினராக செயல் பட்டவர். புதுக்கோட்டை மாவட்டம் பிரிந்த பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்டக் குழு உறுப்பினர், மாவட்ட துணைச் செயலாளர் என பல்வேறு நிலைகளில் பணியாற்றி, நான்கு முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளராக திறம்பட பணியாற்றியவர். விவசாயி களுக்காக, தொழிலாளர்களுக்காக எண்ணற்ற போராட்டங்களை தலைமையேற்று நடத்தியவர்.

 இரண்டு முறை புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி குழு உறுப்பின ராகவும், கடந்த 2006 முதல் 2011 ஆம்  ஆண்டு வரை ஆலங்குடி தொகுதி யின் சட்டப்பேரவை உறுப்பினராக வும் மக்களால் தேர்வு செய்யப்பட்டு மிகச்சிறந்த மக்கள் பிரதிநிதியாக பணியாற்றினார்.  கடந்த 2013-இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த அவர், மாவட்ட செயற்குழு உறுப்பின ராக பல ஆண்டுகாலம் பணியாற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ச்சிக் கும், புதுக்கோட்டை மாவட்ட உழைப் பாளி வர்க்கத்திற்கும் மிகச்சிறந்த மக்கள் தலைவராக திகழ்ந்தார்.

கடந்த சில வருடங்களாக உடல்  நலம் பாதிக்கப்பட்டிருந்த தோழர் எஸ்.ராஜசேகரன், உடல் நலம் தீவிர மாக பாதிக்கப்பட்ட நிலையில்,  புதுக்கோட்டை தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலமானார்.  தோழர் எஸ்.ராஜசேகரனுக்கு அம ராவதி என்ற மனைவி, ஜீவபாரதி என்ற மகனும், கல்பனா என்ற மகளும் உள்ளனர்.  அன்னாரது இறுதிநிகழ்ச்சி, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி  தாலுகா குலமங்கலம் வடக்கு கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.