புதுக்கோட்டை, டிச.8- 15 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்துவரும் ஏழை மக்களுக்கு அடிப் படை வசதிகள் செய்து கொடுக்காமல் நில ஆக்கிர மிப்பாளர்களுக்கு வீட்டு மனை அனுமதி வழங்கிய திருமலைராயசமுத்திரம் ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பாதிக்கப்பட்ட மக்கள் புதனன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை அருகே திருமலைராய சமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட உடைய னேரி காலனியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி குடியி ருந்து வருகின்றனர். இவர்களுக்கு மின்சார வசதி, சாலை குடிநீர் 100 நாள் வேலை திட்ட அடையாள அட்டை உள்ளிட்ட எந்த வசதி களையும் ஊராட்சி நிர்வா கம் அமைத்துக் கொடுக்க வில்லை. அவர்களுக்கு வீட்டு வரி ரசீது கூட தர மறுப்ப தாக அப்பகுதி மக்கள் குற் றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘மின் விளக்கு, குடிநீர், சாலை, வீட்டு வரி ரசீது உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதி களையும் பல ஆண்டு களாக குடியிருந்து வரும் மக்களுக்கு ஊராட்சி நிர்வா கம் செய்து கொடுக்க வில்லை. அடிப்படை வசதி களை ஏற்படுத்தி தர கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே கோட்டாட்சியர் உத்தரவு பிறப் பித்தும் அதனை செயல் படுத்த ஊராட்சி நிர்வாகம் மறுத்து வருகிறது. இந்நிலையில், நீதி மன்றத்தில் வழக்கு இருக் கும்போது தனி நபருக்கு மட்டும் எப்படி வீட்டுமனைக் கான அனுமதி வழங்க முடி யும். எனவே, தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் வீட்டு வரி ரசீது வழங்கும் வரை தொடர் போராட்டத்தில் ஈடு படுவோம்’’ எனத் தெரிவித்த னர்.