புதுக்கோட்டை, மார்ச் 14- 35 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் புதுக்கோட்டை மாவட்டம் இரும்பாநாடு பட்டியல் இன மக்களின் காலனி வீடு களுக்கு மனைப்பட்ட வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. இதுகுறித்து இரும்பா நாடு பட்டியல் இன மக்களு டன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற் குழு உறுப்பினர் எஸ்.சங்கர், விவசாயத் தொழிலாளர்கள் சங்க ஒன்றியத் தலைவர் வே.வீரையா ஆகியோர் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவை சந்தித்து மனு அளித்தனர். மனுவில் கூறப்பட்டி ருப்பதாவது: ஆவுடையார் கோவில் தாலுகா, அரிமளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இரும்பாநாடு கிரா மத்தில் வசித்து வருகிறோம். எங்களுக்கு கடந்த 1987-ஆம் ஆண்டு இந்திராகாந்தி கூட் டுக் குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 20 காலனி வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டது. இந்த வீட்டிற்கான வீட்டுவரி, மின் கட்டனங்களை தொட ர்ந்து செலுத்தி வருகிறோம். இந்த வீட்டு முகவரியில்தான் எங்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் பெற்றுள் ளோம். நாங்கள் வசிக்கும் காலனி வீடுகளுக்கு மனைப் பட்டா வழங்க வலியுறுத்தி கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் மாவட்ட ஆட்சித் தலை வர் உள்ளிட்ட அதிகாரிகளி டம் மனுக்கொடுத்து வலி யுறுத்தி வருகிறோம். இது நாள் வரை எங்களுக்கு மனைப்பட்டா வழங்க வில்லை. இந்நிலையில் நாங் கள் குடியிருக்கும் வீட்டு மனைக்கான இடம் தற்பொ ழுது வேறொரு தனிநபரின் பெயரில் பட்டா ஏற்பட்டுள் ளது. மேற்படி வேறொரு தனி நபரின் பட்டாவை உடனடி யாக ரத்துசெய்வதோடு 35 ஆண்டுகளாக குடியிருந்து வரும் எங்களின் பெயரில் ஒவ்வொருவருக்கும் தனித் தனியாக பட்டா வழங்க வேண்டுமென மனுவில் தெரி விக்கப்பட்டுள்ளது. மனு வைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.