districts

img

உள்ளாட்சி மன்றங்களில் பெண்களின் சுதந்திரமான செயல்பாடுகளை உறுதிப்படுத்துக! மாதர் சங்கம் கோரிக்கை

புதுக்கோட்டை, மே 19-  உள்ளாட்சி மன்றங்களில் பிரதிநிதிகளாக தேர்வு செய்யப் பட்டுள்ள பெண்களின் சுதந்திர மான செயல்பாட்டை உறுதிப் படுத்த வேண்டுமென அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கம் வலி யுறுத்தி உள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாவட்டச் செயலாளர் டி.சலோமி தலைமையில் தலைவர் பி.சுசீலா, பொருளாளர் எஸ்.பாண்டிச்செல்வி உள்ளிட்டோர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவை புதனன்று சந்தித்து அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்ப தாவது: ஜனநாயகம், சமத்துவம், பெண் விடுதலை ஆகிய முழக்கங்களை முன்வைத்து அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் நாடு முழுவதும் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.  அதனொரு பகுதியாக ஜன நாயக மாதர் சங்கம் சட்டமன்றம், நாடாளுமன்றம் மற்றும் உள்ளாட்சி மன்றங்களில் பெண்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டு மென தொடர்ச்சியாகப் போராடி வருகிறது. எங்கள் போராட்டங்களில் ஒரு பகுதியாக உள்ளாட்சி மன்றங்களில் பெண்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், புதுக்கோட்டை மாவட்டத் தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும் பாலான பெண்களுக்குப் பதிலாக அவரது கணவர் அல்லது குடும்பத் தினரே பிரதிநிதிகளாக ஆதிக்கம் செலுத்தும் போக்கு உள்ளது.  அவர்களின் அலுவலக அறைக ளில் இவர்களே அமர்ந்து பணி யாற்றுகின்றனர். அரசு நிகழ்ச்சி களில் தாங்களே தலைவர்கள், கவுன் சிலர்கள் எனக் கூறிக்கொண்டு மேடைகளை அலங்கரிக்கின்றனர். இது முழுக்க முழுக்க அரசியல் சட்டத்திற்கு எதிரானது.  இத்தகைய போக்கை அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அனுமதிக்காது. எனவே, தேர்ந் தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதி களின் செயல்பாடுகளை உறுதிப் படுத்துவதற்கு மாவட்ட ஆட்சியர் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.