அறந்தாங்கி, ஜன.13- புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத்திற் குட்பட்ட புதுக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களின் சமத்துவ பொங்கல், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்திற்கான விழிப்புணர்வு பேரணி மற்றும் கோலப் போட்டிகள் நடைபெற்றன. நிகழ்ச்சி மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் செழியன் தலைமையில் தொடங்கியது. அலுவலர் இந்திராணி மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) சிவயோகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் அந்தோணியம்மாள் வரவேற்றார். ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.
பாபநாசம்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூரில் திமுக சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் முத்துச் செல்வம், பாபநாசம் தெற்கு ஒன்றியச் செயலாளர் நாசர், பாபநாசம் பேரூராட்சித் தலைவர் பூங்குழலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.