districts

img

போதை பொருட்கள் ஒழிப்பு  விழிப்புணர்வு பேரணி

பொன்னமராவதி, ஜூன் 24 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காந்தி சிலை முன்பு புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் கள்ளச்சாராயம், போதை பொருட்கள் மற்றும் மதுப் பழக்கம் ஆகியவற்றால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்த விழிப்பு ணர்வு பேரணி நடைபெற்றது.  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் வழிகாட்டுதலின் பேரில் நடை பெற்ற இந்த பேரணிக்கு பொன்னமராவதி வட்டாட்சியர் ஜெயபாரதி தலைமை வகித்தார். பேரணியை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். காந்தி சிலை முன்பு  துவங்கிய இந்த பேரணி பொன்னமராவதி அண்ணா சாலை, பேருந்து நிலையம், நாட்டுக்கல் வீதி வழியாக சென்று பொன்னமராவதி காவல் நிலையம் முன்பு நிறைவுற்றது.  பேரணியில் கோட்ட கலால் அலுவலர் கண்ணா கருப்பையா, பொன்னமராவதி வருவாய்த்துறை சார்பில் துணை வட்டாட்சியர்கள், பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், வருவாய் ஆய்வாளர்கள், கிராம  நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கட்டைக்கால் நடனம், கிராமிய பல்சுவை கலை நிகழ்ச்சி களுடன் விழிப்புணர்வு பாடல்கள் இடம்பெற்றன.

;