districts

img

தமுஎகச-வின் ஆவணப்பட வெளியீட்டு விழா அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பங்கேற்பு

புதுக்கோட்டை, மே 1 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் ‘திடல் இலக்கிய கூடலின்’  சார்பில் ஆவணப்பட வெளியீட்டு விழா புதுக்கோட்டை அறிவியல் இயக்க கூட்ட அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு தமுஎகச மாவட்டத் தலைவர்  எம்.ஸ்டாலின்சரவணன் தலைமை வகித்தார்.  செயலாளர் சு.மதியழகன் வரவேற்றார். விழா வில் ‘ட்ரீம் ஆப் ஒலிம்பிக்’ என்ற ஆவணப் படத்தை வெளியிட்டு சுற்றுச்சூழல், கால நிலை மாற்றம், இளைஞர்நலன் மற்றும் விளை யாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் சிறப்புரையாற்றினார். கவிஞர்கள் நா. முத்துநிலவன், தங்கம்மூர்த்தி, ஜீவி ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். விழாவில் கவிநாடு இளைஞர் விளை யாட்டு மன்றத் தலைவர் பிவிஆர்.சேகரன்  பயிற்சியாளர் எஸ்.லோகநாதன், ஆவணப் பட இயக்குனர்கள் ராஜூ மாரியப்பன், சிவ.சித்திரைச்செல்வன் ஆகியோர் கவுர விக்கப்பட்டனர். ‘ட்ரீம் ஆப் ஒலிம்பிக்’ மற்றும்  நாடோடி ஆகிய ஆவணப்படங்கள் திரை யிடப்பட்டன. திரைப்படங்கள் குறித்து எஸ். இளங்கோ, கி.ஜெயபாலன், ஆர்.நீலா, துரை. அரிபாஸ்கர், அ.மணவாளன் உள்ளிட்டோர் பேசினர். முடிவில் புதுகை கிளைச் செயலா ளர் சு.பீர்முகமது நன்றி கூறினார்.

;