புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு ராகுல் காந்தியின் பதவியை பறித்த பாஜக அரசை கண்டித்து மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராம.சுப்புராம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் துரை.நாராயணன் உள்ளிட்ட தோழமைக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.