புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தொகுதி - III பதவிக்கான தேர்வு நடைபெறுவதை, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது கல்லூரி முதல்வர் திருசெல்வன், வட்டாட்சியர் விஜயலெட்சுமி மற்றும் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.