புதுக்கோட்டை, மார்ச் 17 - புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து நடை பெற்ற பேச்சுவார்த்தையில் கறம்பக்குடி பேரூராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவதாக அதிகாரிகள் உறுதி யளித்துள்ளனர். கறம்பக்குடி பேரூராட்சிக்குட்பட்ட அக்ரஹாரம், கறம்பக்குடி வடக்குப் பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்;ட் கட்சி கிளைகளின் சார்பில் அப்பகுதி மக்களின் பல்வேறு அடிப்படைக் கோரிக்கைகளை வலி யுறுததி வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறி வித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை பேரூராட்சித் தலைவர் முருகேசன், துணைத் தலைவர் நைனா முகமது ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் த.அன்பழகன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ். பொன்னுச்சாமி, ஒன்றியச் செயலாளர் பி.வீரமுத்து, கிளைச் செயலாளர் ஆர்.கே.செந்தில்குமார் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் கறம்பக்குடி சிவன்கோவில் குளக்கரை யில் உள்ள தேவையற்ற இரண்டு தொட்டிகளும் அகற்றப்படும். அம்பேத்கர் மையம், பெட்ரோல் பங்கிற்கு அருகில் உள்ள சாலை களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து விரைவில் பணிகள் தொடங்கப்படும், கஜா புயலில் சேதமடைந்த ஈமக்கிரியைத் கொட்டகை விரைவில் சரிசெய்துதரப்படும். வரத்துவாரிகளை தூர்வாரப்படும். இந்தக் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றித் தருவதாக தலைவரும், துணைத் தலைவரும் உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.