districts

மின் கட்டண உயர்வைக் கண்டித்து ஆக.2 இல் சிபிஎம் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஜூலை 27- தமிழக அரசு உயர்த்தியுள்ள மின்  கட்டண உயர்வைக் கண்டித்து புதுக் கோட்டை மாவட்டத்தில் உள்ள மின்சார வாரிய அலுவலகங்கள் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆகஸ்ட் 2  அன்று பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட் டம் நடைபெற உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக் கோட்டை மாவட்ட குழுக்கூட்டம் செவ்வாய்க் கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சு.மதியழகன் தலைமை வகித்தார். மாநில குழு முடிவுகளை விளக்கி மாநிலக்குழு உறுப் பினர் ஐ.வி.நாகராஜன் பேசினார்.  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னத்தை விளக்கி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் வெளியிட்டுள்ள அறிக்கை யில், “தமிழக மக்கள் விலைவாசி உயர்வி னால் ஏற்கனவே கடுமையான சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் ஒன்றிய அரசை காரணம் காட்டி தமிழக  அரசு மின்கட்டண உயர்வை அறிவித்திருப் பது ஏற்புடையது அல்ல. சாதாரண மக்கள்  மீது சுமத்தப்படும் இத்தாக்குதலை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக் கிறது.  மின் கண்டன உயர்வைக் கண்டித்தும், அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் கட்சியின் சார்பில் புதுக் கோட்டை மாவட்டத்தில் உள்ள மின்சார வாரிய அலுவலகங்கள் முன்பு ஆகஸ்ட் 2  ஆம் தேதி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடை பெறுகிறது. அதேபோல மத்திய அரசு உணவுப் பொருட்கள் மீது விதித்துள்ள ஜிஎஸ்டி வரியை கண்டித்தும், வரி விதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தியும், ஒன்றிய அரசு அலுவ லகங்கள் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஜூலை 29 அன்று  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது”  என தெரிவித்துள்ளார். கூட்டத்தில் மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.