districts

img

நாட்டு நலப்பணித் திட்ட நிறைவு விழா: அமைச்சர் பங்கேற்பு

அறந்தாங்கி, மே 20 - புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியத் திற்குட்பட்ட பெருநாவலூர் பகுதியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட  நிகழ்ச்சி ஆவுடையார்கோவில் பகுதியில் ஒருவாரம் நடை பெற்று முடிவடைந்தது. கடந்த ஒரு வாரமாக குளங்கள் தூர்வாருதல், கோவில் பகுதிகளை தூய்மைப்படுத்துதல். நெகிழி குறித்து விழிப்பு ணர்வு பேரணி, 108 ஆம்புலன்ஸ் சேவை குறித்து விழிப்புணர்வு  நிகழ்ச்சி என நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் இப்பகுதி யில் பணியாற்றினர். நிறைவு நாள் நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்  சி.வீ.மெய்யநாதன் உரையாற்றினார்.  கல்லூரி முதல்வர் கண்ணன், கோட்டாட்சியர் சொர்ணராசு,  கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

;