districts

img

முடிவுற்ற வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்கம்: அமைச்சர் பங்கேற்பு

பொன்னமராவதி, ஜன.30- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் தேனூர் ஊராட்சி தேனிமலை பிள்ளையார் கோவில் அருகில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்  பாட்டு நிதியிலிருந்து ரூ.6 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலையரங்கம், அரசமலை ஊராட்சி வையாபுரியில் ரூ.25 லட்சம் செலவில் புதிதாக கட்டப்  பட்டுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கட்டி டம் வாழைக்குறிச்சி ஊராட்சி நெய்வேலி கிராமத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் 143.10 லட்சம் செலவில் புதிதாக  கட்டப்பட்டுள்ள பாலம், கீழத்தானிய ஊராட்சி ரெங்கா புரம் கார்ணாப்பட்டி சாலை, சின்ன கருப்பர் கோவில்  அருகில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத் தின் கீழ் 34.88 செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிறு பாலம் ஆகியவற்றை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார்.  மேலும் மேலத்தானியம் தொடக்க வேளாண்மை கூட்டு றவு கடன் சங்கத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் தள்ளுபடி செய்ததற்கான சான்றிதழ்களையும், புதி தாக வங்கி கடன்களையும் வழங்கினார். 

;