புதுக்கோட்டை, நவ.14- ரெகுநாதபுரம் அரசு மேல் நிலைப்பள்ளி கட்டிட மேற் கூரை இடிந்து விழுந்ததால் மாணவர்களும், பெற்றோர் களும் அச்சமடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட் டம் கறம்பக்குடி அருகே ரெகுநாதபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள் ளது. இப்பள்ளியில் 740 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இப்பள்ளி கட்டி டம் தற்போது ஆங்காங்கே சிதிலமடைந்துள்ளது. எப்போது வேண்டுமானா லும் இடிந்து விழும் நிலை யில் உள்ள இக்கட்டிடத்தில் மாணவர்கள் அச்சத்துடன் படித்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளி கட்டிட மேற்கூரையின் ஒரு பகுதி விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை திடீ ரென பெயர்ந்து விழுந்தது. திங்கள்கிழமை காலை பள்ளிக்குச் சென்ற ஆசிரி யர்களும் மாணவர்களும் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனைய டுத்து மாணவர்களை அந்த வகுப்பறைக்குள் அனும திக்காமல் மாற்று வகுப்ப றையில் வைத்து ஆசிரியர் கள் பாடம் நடத்தி வருகின்ற னர். விடுமுறை தினத்தில் இச்சம்பவம் நடைபெற் றுள்ளதால் அசம்பாவிதங் கள் தவிர்க்கப்பட்டுள்ளன. எப்போது வேண்டுமானா லும் இடிந்து விழும் இப்பள்ளி கட்டிடம் குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட நிர்வாகத் திற்கு புகார் கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதுபோன்று கறம்பக்குடி தாலுகாவுக்கு உட்பட்ட பல பள்ளி கட்டி டங்கள் சிதிலமடைந்துள்ள தாக அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந் துள்ள நிலையில், சிதில மடைந்த பள்ளி கட்டிடத்தை முழுமையாக அகற்றிவிட்டு புதிய கட்டடத்தை கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என அப்பகுதி பொதுமக் கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.