புதுக்கோட்டை, ஏப்.16 - புதுக்கோட்டை மாவட்டம் வத்தனா குறிச்சியில் விதிமுறைகளை மீறி செயல்படும் கல்குவாரியை மூட வலியு றுத்தி கந்தர்வகோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்னத்துரை எம்எல்ஏ தலைமையில் வெள்ளிக்கிழமை பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகாவில் உள்ளது வத்தனாகுறிச்சி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட வெவ்வயப்பட்டி மற்றும் வத்தனா குறிச்சி ஆதிதிராவிடர் கூட்டுக் குடியி ருப்பு அருகில், கடந்த 15 ஆண்டுக ளுக்கும் மேலாக தனியார் கிரஷர், தார் பிளாண்டுடன் கல்குவாரி இயங்கி வரு கிறது. இந்தக் குவாரி அரசின் விதிமுறை களை மீறி செயல்படுவதாகவும், குவாரி யில் வைக்கப்படும் வெடியால் அதிர்வு ஏற்பட்டு வீடுகளில் விரிசல் ஏற்பட்டு வரு கிறது. வெடியின் அதிர்வால் குழந்தைகள் மன அளவில் பாதிப்பை சந்தித்து வரு வதாகவும், கர்ப்பிணிப் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படுவதாகவும் அப்பகு தியினர் கூறுகின்றனர். மேலும், கல்குவாரி மற்றும் தார் பிளாட்டி லிருந்து வெளியாகும் தூசி மற்றும் புகை யினால் காற்று மாசுபடுவதாகவும், பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்ப டுவதாகவும், குடிநீர் மாசுபடுவதாகவும் கூறப்படுகிறது. இதனால், விவசாயம் பாதிக்கப்படு வதோடு குடிதண்ணீரும் மாசுபடுவதால் வத்தனாகுறிச்சி, வெவ்வயப்பட்டி, வத்தனாகுறிச்சி காலனி, சத்திரப்பட்டி, தண்ணீர்பந்தல்பட்டி, கதிரேசன்நகர், புதுவயல், திருமலைராயபுரம், உடை யாம்பட்டி, சூசையப்பர்பட்டினம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, மேற்படி கிரஷரை மூடக் கோரி கிராம மக்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சம்பந்தப் பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை.
மேற்படி பகுதி கந்தர்வ கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குள் வருகிறது. இதனைத் தொடர்ந்து இப்பிரச்சனை, தொகுதி எம்எல்ஏவான எம்.சின்னத்துரையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருச்சி யிலிருந்து இராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கீரனூரை அடுத்த பொம்மாடிமலையில் சட்ட மன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை தலைமையில், தனியார் கிரஷரை மூடக்கோரி சாலை மறியல் போராட் டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஏ.ஸ்ரீதர், கே.சண்முகம், மாவட் டக்குழு உறுப்பினர் கே.தங்கவேல், ஒன்றியச் செயலாளர்கள் எஸ்.கலைச் செல்வன், எம்.ஆர்.சுப்பையா, ஊராட்சி மன்றத் தலைவர் மல்லிகா மாயழகு, ஒன்றியக் கவுன்சிலர் பி.சூசை, பேரூராட்சி கவுன்சிலர் கே.மகா லெட்சுமி, முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் எம்.மைக்கேல், சிபிஎம் ஒன்றி யக் குழு உறுப்பினர்கள் பழனிவேல், ரகுபதி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சந்திரன், ராபர்ட், மாரிமுத்து உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் போராட்டத் தில் ஈடுபட்டனர். போராட்டத்தைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, குளத் தூர் வட்டாட்சியர் பெரியநாயகி உள்ளிட்ட வருவாய்த் துறையினரும் காவல்துறையினரும் தொடர்ந்து எம்.சின்னத்துரை எம்எல்ஏ மற்றும் ஊர்ப் பிரமுகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னர். இதுதொடர்பாக ஆய்வு நடத்தி ஆலையை மூடுவதற்கு உரிய நடவ டிக்கை எடுப்பது எனவும், அதுவரை கிரஷர் ஆலையை தற்காலிகமாக மூடு வது எனவும் அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தனர். தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.