districts

img

குழந்தை திருமண தடைச்சட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

பொன்னமராவதி, ஜன.4- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பொன்-புதுப்பட்டி நாகப்பா செட்டியார் நினைவு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தைகளுக்கான பாரா ளுமன்றம் செயல்பட்டு வருகிறது.  இப்பாராளுமன்ற செயல்பாடுகளை ஊக்கப்படுத்தும் விதமாக, ஆர்டிஓ சைல்டு லைன் அலுவலகத்திற்கு வருகை தந்த ஜெர்மன் நாட்டு தன்னார்வலர்கள் கரோ, கரோலின் ஆகியோர் குழந்தை திருமண தடைச்சட்டம் மற்றும் போக்சோ சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 1098 சைல்டு லைன் பொன்னமராவதி களப்பணியாளர் பூங்கொடி, திருமயம் களப்பணியாளர் ராஜலெட்சுமி, தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

;