புதுக்கோட்டை மாவட்டம் போஸ் நகரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.35.14 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 384 அடுக்குமாடிக் குடியிருப்புகளை காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தார். பின்னர் போஸ் நகரில் நடைபெற்ற விழாவில், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பயனாளிகளுக்கு குடியிருப்பிற்கான ஆணைகளை வழங்கினார்.