புதுக்கோட்டை, டிச.3 - ஒன்றிய, மாநில அரசுகள் போதிய நிதி ஒதுக்கீடு செய்து காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட மாநாடு வலி யுறுத்தி உள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் புதுக்கோட்டை மாவட்ட 24 ஆவது பிரதிநிதிகள் மாநாடு செவ்வாய்க்கிழமை கீரனூரில் எழுச்சியுடன் தொடங்கியது. மாநாட்டுக் கோடியை மூத்த தோழர் சா.தோ.அருணோதயன் ஏற்றி வைத் தார். அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர் வாசித் தார்.
மாநாட்டிற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ராமையன், கே.சண்முகம், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.பாண்டிச்செல்வி ஆகியோர் தலைமை வகித்தனர்.
மாநிலக்குழு உறுப்பினரும், வரவேற்புக்குழுத் தலைவருமான எம்.சின்னதுரை எம்எல்ஏ வரவேற்புரையாற்றினார். மாநாட்டை தொடங்கி வைத்து மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராம லிங்கம் உரையாற்றினார். அரசியல் ஸ்தாபன அறிக்கையை மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் முன்வைத் தார். வரவு-செலவு அறிக்கையை மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.கண்ணம்மாள் வாசித்தார். தொடர்ந்து பிரதிநிதிகள் விவாதம் நடைபெற்றது.
தீர்மானங்கள்
மாநாட்டில் புதுக்கோட்டை, சிவ கங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 7 மாவட்ட மக்களின் வாழ்வாதாரக் கோரிக் கையான காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நிதி ஒதுக்கீடு செய்து திட்டத்தை விரைந்து நிறை வேற்ற வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்ட இளைஞர் களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், மாவட்டத்தி லேயே கிடைக்கும் இயற்கை வளங்க ளையும் கனிம வளங்களையும் பயன்படுத்தி அரசு சார்பில் புதிய தொழிற் சாலைகளை உருவாக்க வேண்டும். ஏழை, எளிய மக்களை கடன் வலையில் சிக்க வைத்து அவர்களின் வாழ்வாதா ரத்தை சீரழிப்பதோடு, பல்வேறு வகை களிலும் துன்புறுத்தலுக்கு உள்ளாக் கும் நுண்நிதி நிறுவனங்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.
மேலும், ஏழைக் குடும்பங்களுக்கு பொதுத்துறை வங்கிகள் மூலம் வட்டி யில்லாத அல்லது மிகக்குறைந்த வட்டியில் கடனுதவி வழங்கி அவர்களைக் காப்பாற்ற வேண்டும்.
மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத்தில் உள்ள முறைகேடுகளைக் களைவதோடு, திட்டத்திற்கு போது மான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட கூலியையும், வேலை நாட்களையும் வழங்க வேண்டும்.
விண்ணப்பித்த அனைவருக்கும் வேலை அட்டை வழங்க வேண்டும். மாவட்டம் முழுவ தும் நிலவும் பல்வேறு வகையான தீண்டாமை வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்துவதற்கு தமிழ்நாடு அரசும், காவல்துறையும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்கொடுமை யைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
மாவட்டம் முழுவதும் வீடு இல்லாத அனைத்து ஏழைகளுக்கும் இலவச வீடும், மனைப்பட்டா இல்லாத அனை வருக்கும் இலவச மனைப் பட்டாவும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
நூல் வெளியீடு
மாநாட்டில் எஸ்.கவிவர்மன், என். கண்ணம்மாள் ஆகியோர் எழுதிய ‘மக்கள் மனங்களில் வாழும் மகத்தான தலைவர் தோழர் ஆர்.கருப்பையா’ என்ற நூலை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வெளி யிட்ட இளம் கம்யூனிஸ்ட் தோழர்கள் பெற்றுக்கொண்டனர்.