districts

img

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

புதுக்கோட்டை, டிச.1- புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்  முறையாக அரசு மருத் துவக் கல்லூரி மருத்  துவமனையில் மூளைச் சாவு அடைந்த கட்டடத் தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டம் மண மேல்குடி அருகேயுள்ள இடையாத்தி மங்கலத்தைச் சேர்ந்தவர் குஞ்சுநாதன் (53). இவர், நவம்பர் 28 அன்று கட்டடப் பணியில்  இருந்த போது தவறி கீழே விழுந்து தலை யில் பலத்த காயங்களுடன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டும் அவரது உடல் நிலையில் முன்னேற்றமில்லை.  இந்நிலையில், நவம்பர் 30-ஆம் தேதி  இரவு அவர் மூளைச்சாவு அடைந்தது  உறுதி செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சி யாக அவரது உடல் உறுப்புகளை தானம்  செய்ய விருப்பமுள்ளதா என குஞ்சுநாத னின் குடும்பத்தினரிடம் கேட்கப்பட்டது. அவர்கள் விருப்பம் தெரிவித்ததன் அடிப்படையில், தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் ஆலோசனை பெறப்பட்டு, வியாழனன்று அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை  நடைபெற்றது. குஞ்சுநாதனின் உடலிலி ருந்து கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் இரு கண்களின் கருவிழிகளும் பாதுகாப்பாக எடுக்கப்பட்டன. ஏற்கெனவே உறுப்பு மாற்று ஆணை யத்தில் பதிவு செய்திருந்தவர்களின் மூப்பு அடிப்படையில் கல்லீரல் திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கும், சிறு நீரகங்கள் மற்றும் கண் கருவிழிகள் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கும் பாதுகாப் பாக அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கான அறுவைச் சிகிச்சையை மருத்துவக் கல்லூரி முதல்வர் மு.பூவதி தலைமையில், இருக்கை மருத்துவர் இந்தி ராணி, சிறுநீரகவியல் மருத்துவர் சரவண குமார், அவசர சிகிச்சைப் பிரிவு துறைத் தலைவர் ஹேமா அகிலாண்டேஸ்வரி ஆகி யோரைக் கொண்ட குழுவினர் மேற் கொண்டனர். புதுக்கோட்டையில் நடை பெற்ற முதல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை இதுவாகும்.