districts

ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சொந்தமான இடத்தை மீட்டுத் தர சிபிஎம் வலியுறுத்தல்

புதுக்கோட்டை, நவ.24- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கறம்பக்குடி தெற்கு ஒன்றிய பேரவைக் கூட்டம் மழையூரில் வியாழனன்று நடை பெற்றது.  கூட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் ஆர். காமராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், செயற்குழு உறுப்பினர் த.அன்பழகன் ஆகியோர் உரையாற்றினர்.  கூட்டத்தில், கறம்பக்குடி தாலுகா பல்ல வராயன் பத்தை ஊராட்சிக்கு உட்பட்டது புதுவலசல் கிராமம். இங்கு நூற்றுக்கும்  மேற்பட்ட ஆதிதிராவிடர் இன குடும்பங்கள்  உள்ளன. இந்த கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு தனியாரிடம் இருந்து 1999-ல் 1.30 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது.  பின்னர் அந்த நில உரிமையாளர் நிலத் துக்கான தொகையை வாங்க மறுத்துள் ளார். இதனைத்தொடர்ந்து நிலத்துக்கான தொகை கருவூலம் மூலம் ஆதிதிராவிடர் நலத்துறையால் செலுத்தப்பட்டுள்ளது.  இதனையடுத்து நிலத்தை விற்றவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் 3.4.2008-ல் வழங்கிய தீர்ப்பில் நிலம் ஆதி திராவிடர் நலத்துறைக்கே சொந்தமானது எனத் தீர்ப்பளித்தது.  ஆனால், இதுநாள்வரை நிலத்தை வரு வாய்த்துறையினர் கையகப்படுத்தி ஒப்ப டைக்கவில்லை. இதற்கு இடையே நிலத்தை விற்றவர் ஆதிதிராவிடர் நலத் துறைக்கு விற்றதை மறைத்து போலியாக ஆவணங்களைத் தயாரித்து வேறு நபர் களுக்கு கைமாற்றி உள்ளார்.  எனவே, தமிழக அரசும், மாவட்ட நிர்வா கமும் உடனடியாக தலையிட்டு நிலத்தை கையகப்படுத்தி ஆதிதிராவிடர் நலத்  துறையிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும், அந்த நிலத்தில் ஆதிதிராவிடர் மக்களில் தகுதி வாய்ந்த குடும்பங்க ளுக்கு மனைப்பட்டாவாக பகிர்ந்தளிக்கப் பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.