புதுக்கோட்டை மாவட்டம், கீழாத்தூரில் ஆலங்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய கட்டடப் பணியினை சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஞாயிற்றுக்கிழமை அடிக்கல்நாட்டினார். நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர்கள் முருகேசன் (புதுக்கோட்டை), சு.சொர்ணராஜ் (அறந்தாங்கி), திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, அறந்தாங்கி ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், மண்டல இணை இயக்குநர் (கல்லூரி கல்வி இயக்ககம்) குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.