புதுக்கோட்டை, பிப்.2 - இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் மாண வர்களுக்கான கற்றல் உபகரணங்கள் எய்டு இந்தியா நிறுவனத்தின் சார்பில் புதுக்கோட் டையில் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் அடங்கிய தொகு ப்பை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு இல்லம் தேடி கல்வி மைய குழந்தைக்கு அளித்தார். இத்தொகுப்பு மாவட்ட முழுவதும் ஆயிரம் மையங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவ லர் சாமி.சத்தியமூர்த்தி, எய்டு இந்தியா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா, அறிவி யல் இயக்க மாநில செயலாளர் எஸ்.டி.பால கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.