districts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவின் முடிவு சந்தேகம் கொள்ளச் செய்கிறது

புதுக்கோட்டை,  ஜூன் 16 - விக்கிரவாண்டியில் நடைபெறும் இடைத்தேர்த லில் அதிமுக போட்டியி டாதது வியப்பளிக்கிறது, மேலும் சந்தேகம் கொள்ளச் செய்கிறது என்றார் சிவ கங்கை மக்களவைத் தொ குதி உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம்.

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டியில், “தமிழ் நாட்டில் முக்கியமான கட்சி,  பலம் பொருந்திய சின்னத் தைக் கொண்டுள்ள கட்சி அதிமுக. இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என  அறிவித்திருப்பது வியப்ப ளிக்கிறது.

நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் அந்தத் தொகுதியிலும் கணி சமான வாக்குகளைப் பெற்றி ருக்கிறார்கள். தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்து கிறது. எனவே, இடைத் தேர்தலில் போட்டியிடாதது சந்தேகம் கொள்ள வைக் கிறது. தில்லியில் இருந்து பாஜக அணிக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பதற் காக அதிமுகவை போட்டி யிட வேண்டாம் எனச் சொல்லி அழுத்தம் கொடுத் திருக்கலாம் என்ற சந்தேகம்  வருகிறது.

'காவிரி நீர் விவகாரத்தில்  தமிழ்நாட்டு எம்.பி.க்கள் ஒற்றுமையுடன் நமது மாநில உரிமையை மக்களவையில் கேட்போம். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

கோவில்களை இந்துக்க ளிடம் கொடுக்க வேண்டும் என்ற குரல் அவ்வப் போது எழுகிறது. அறநிலை யத் துறையை எடுத்து விட்டால், அதனை நிர்வகிக் கும் பொறுப்பை யாரிடம் கொடுப்பது, எந்த குழுவிடம் கொடுப்பது, அவர்கள் யாரையெல்லாம் கோவிலுக் குள் விடுவார்கள். அம்பேத் கரும், பெரியாரும் பட்ட கஷ்டம் வீணாகிவிடும்.

நீட் தேர்வு தொடர்ந்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகிறது. தேசியத் தகுதித் தேர்வு முகமையின் தலைமை அலுவலர் ராஜி நாமா செய்ய வேண்டும். நீட்  தகுதித் தேர்வை ரத்து செய்ய  வேண்டும்” என்றார்.