districts

img

குடிநீர்த் தொட்டியில் மனித மலத்தை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தகவல்

புதுக்கோட்டை, டிச.29-  பட்டியலின மக்கள் பயன்படுத் தக்கூடிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித மலத்தைக்  கலந்த கொடூரமான செயலை செய்தவர்கள் மீது கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் என சுற்றுச் சூழல்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் கூறினார்.   புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றி யத்துக்குட்பட்ட முத்துக்காடு ஊராட்சி இறையூர் கிராமத்தில் மக்கள் பயன்படுத்தக்கூடிய மேல்  நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் மனிதக்கழிவை கலந் தது பெரும் அதிர்வலைகளை ஏற்  படுத்தியது. இதனையடுத்து கந்  தர்வகோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்ன துரை அதிகாரிகளை அழைத்துக்  கொண்டு சம்பந்தப்பட்ட கிராமத்  திற்குச் சென்ற ஆய்வு மேற்கொண்  டார். இதனைத் தொடர்ந்து இச்செய லில் ஈடுபட்ட அடையாளம் தெரி யாத நபர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரி வின் கீழ் வழக்கு பதிவு செய்து  குற்றவாளிளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்நிலையில்,  கடந்த 27-ஆம் தேதி இறையூர் கிரா மத்திற்குச் சென்ற மாவட்ட ஆட்சி யர் கவிதா ராமு மற்றும் மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே ஆகியோர் அப்பகுதி பொதுமக்களிடம் நேரடி யாக விசாரணை மேற்கொண்ட னர். அப்போது அப்பகுதியில் உள்ள அய்யனார் கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்ய பட்டிய லின மக்களுக்கு அனுமதி மறுக் கப்படுவதாகவும், அங்குள்ள ஒரு தேநீர் கடையில் இரட்டை குவளை முறை பின்பற்றப்படுவதாகவும் புகார் தெரிவித்தனர்.  இதனைத் தொடர்ந்து உடனடி யாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பட்டியலின மக்களை சம்பந்  தப்பட்ட கோவிலுக்குள் அழைத் துச் சென்று வழிபாடு செய்ய வைத்  தார். மேலும், மாவட்ட எஸ்பி வந்  திதா பாண்டே உத்தரவின் பேரில் நான்கு பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவு களில் வழக்கு பதிவு செய்து சிங்கம்  மாள் மற்றும் தேநீர் கடை நடத்தும் மூக்கையா ஆகியோரைக் கைது செய்தனர்.

இன்று சிபிஎம் ஆர்ப்பாட்டம் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்பு
பட்டியலின மக்களுக்கான குடிநீர்த் தொட்டியில் மனித மலத்தை கலந்த குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கைது செய்யப்படாததைக் கண்டித்தும், விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வெள்ளியன்று (டிச.30) காவேரி நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்கிறார்.

சமத்துவப் பொங்கல் விழா
இந்நிலையில், சம்பந்தப்பட்ட இறையூர் வேங்கைவயல் பகுதி யில் உள்ள மக்களிடம் பிரச்சனை கள் ஏற்படாமல் இருக்கவும், ஒற்  றுமை ஏற்படுத்திட வலியுறுத்தியும் இலுப்பூர் கோட்டாட்சியர் குழந் தைசாமி தலைமையில் சமரசக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அப்பகுதியில் உள்ள அய்யனார் கோயிலில் மூன்று சமுதாய மக்க ளும் ஒன்றிணைந்து வழிபாடு நடத்த முடிவெடுக்கப்பட்டது. இதனையடுத்து மூன்று சமு தாய மக்களும் ஒன்றிணைந்து சமத்துவப் பொங்கல் விழா நடத்த மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு  செய்யப்பட்டது. பட்டியலின  மக்களை வருவாய்த்துறையின ரும் ஆதி திராவிட நலத்துறை அதி காரிகளும் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக தட்டு தாம்பூலத்துடன் கோயிலுக்கு அழைத்துச் சென்ற னர். பின்னர், மூன்று சமுதாய மக்க ளும் ஒன்றிணைந்து சமத்துவ பொங் கலிட்டு வழிபாடு செய்தனர்.  இந்நிகழ்வில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், கந்தர்வ கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, வருவாய்த்துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர் காவல் துறையினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் கூறுகையில், ‘‘இறையூர் கிராமத்தில் அனைத்து சமுதாய மக்களும் ஒன்றாக இணைந்து சமத்துவ பொங்கல் விழாவை  நடத்தியுள்ள நிகழ்ச்சி பாராட்டத் தக்கது.

மனிதாபிமானமற்ற வகை யில் குடிநீர்த் தொட்டியில் மனித மலத்தை கலந்த செயலை யார் செய்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மலம்  கலக்கப்பட்ட குடிநீர் தொட்டிக்கு  பதிலாக புதிய மேல்நிலை நீர்த்  தேக்கத் தொட்டி விரைவில் கட்டித் தரப்படும். இதுபோன்ற மற்றொரு சம்பவம் அரங்கேறாமல் இருக்க மனிதர்கள் மனதில் மாற்றம் ஏற்பட வேண்டும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தத்துவத்தின் அடிப்ப டையில் ஒவ்வொருவரும் மற்ற வர்களை மதிக்கக் கூடிய வகை யில் செயல்பட்டால் இது போன்ற நிகழ்வு நடைபெறாது’’ என்றார். கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எம்.சின்னத் துரை கூறுகையில், ‘‘இறையூர் கிராமத்தில் நடைபெற்ற இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் தயவு தட்ச ணையின்றி கடுமையாக நட வடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற சம்பவம் அரங்கேறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண் டும். மேலும் பட்டியலின மக்களை கோவிலுக்குள் அழைத்துச் சென்று வழிபாடு செய்ய நட வடிக்கை மேற்கொண்ட மாவட்ட  ஆட்சியர் உள்ளிட்டு அதிகாரிகளுக்  கும், அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதனுக்கும் நன்றியைத் தெரி வித்து கொண்டார்.

;