பொன்னமராவதி, நவ.2- புதுக்கோட்டை மாவட் டம் பொன்னமராவதி ஊரா ட்சி ஒன்றியம் ஆர்.பால குறிச்சி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் கடந்த 17 ஆண்டுகளாக வைரம்பட்டி யலில் இருந்து ஆர்.பால குறிச்சி வழியாக குன்னத்தூர் செல்வதற்கு, சாலை வசதி செய்து தரப்படவில்லை. பேருந்து வசதிகளும் இல்லை. கடந்த 10 ஆண்டு களாக இங்கு மருத்துவ மனை இல்லாததால், சிகிச்சை பெற சிவகங்கை மாவட்டத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. கால்நடை மருத்துவமனை அமைக்க வும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதுகுறித்து பல முறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் எந்தவித நட வடிக்கை எடுக்கவில்லை. இதனால் கிராம சபை கூட் டத்தை புறக்கணித்து கருப் புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். பொன்னமராவதி ஒன் றிய ஆணையர் குமரன் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிவிட்டு, காரில் புறப்பட்டார். அப்போது ஆணையரின் காரை மறித்து தங்களது கோரிக்கை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தி மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த உலகம்பட்டி காவல் துறை யினர் போராட்டத்தில் ஈடு பட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கோரிக்கை கள் குறித்து அரசின் கவ னத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். பின் னர் மறியல் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.