districts

img

15 ஆண்டு காலப் போராட்டத்திற்கு தீர்வு கண்ட எம்.சின்னதுரை எம்எல்ஏவுக்கு பொதுமக்கள் நன்றி

புதுக்கோட்டை, நவ.28-  சாலை வசதி கேட்டு நடத் தப்பட்ட 15 ஆண்டுகாலப் போராட்டத்திற்கு தீர்வு கண்ட  கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்ன துரைக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர். புதுக்கோட்டை மாவட் டம் கந்தர்வகோட்டையை அடுத்த கல்லாக்கோட்டை ஊராட்சியில் உள்ளது ஆண்  டாள் தெரு. இங்கு வசிக்கும் மக்கள் அம்புகோயிலுக்கு சாலைவசதி கேட்டு சட்ட மன்ற உறுப்பினர் எம்.சின் னத்துரையிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.  இதுதொடர்பாக நவம்பர்  26 அன்று சட்டமன்ற உறுப்பி னர்  எம்.சின்னதுரை தலை மையில் வருவாய் கோட் டாட்சியர் முருகேசன் உள்  ளிட்ட அதிகாரிகள் பங்கேற்ற  சமாதான கூட்டம் நடை பெற்றது. இதனைத் தொடர்ந்து நவம்பர் 27 அன்று வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் வருவாய்த் துறையினர் ஆண்டாள் தெரு மக்களின் கோரிக்கையை ஏற்று சாலை வசதியை ஏற்  படுத்தித் தந்தனர். சாலை வசதி ஏற்படுத்த காரணமாக இருந்த கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னத்துரையை திங்க ளன்று சம்பந்தப்பட்ட பொது மக்கள் நேரில் சந்தித்து மாலை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.