புதுக்கோட்டை, ஜூலை 14 - 7 ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவையொட்டி, நடமாடும் நூலக பேருந்து பிரச்சார வாகனத் தினை, மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவிக் கையில், “புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் 7 ஆவது புதுக்கோட்டை புத்தகத் திரு விழா ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 5 வரை 10 நாட்கள் புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த புத்தகத் திருவிழாவினை சிறப்பாக நடத்திடவும், புத்தகத் திருவிழா குறித்து விளம்பரப்படுத்திடவும், பொதுமக்களை ஊக்குவித்திடவும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன.
அந்த வகையில், ஒரு நடமாடும் நூலக அமைப்பில் ஒரு பேருந்து ஏற்பாடு செய்து, சிறந்த நூல்கள், பதா கைகள், துண்டுப் பிரசுரங்கள் மற்றும் ஒலிபெருக்கி அமைத்து பொது மக்கள் கூடும் இடங்களான பேருந்து நிறுத்தங்கள், கோவில்கள், தேவால யங்கள், பள்ளிவாசல்கள், அரசுப் பள்ளி கள் மற்றும் கிராம முக்கிய சந்திப்பு களில் மக்கள் நூலகத்தைப் பயன்படுத் திடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த பிரச்சார வாகனமானது, ஜூலை 15 அன்று கந்தர்வக்கோட்டை, ஜுலை 16 அன்று குன்றாண்டார்கோ வில், ஜூலை 18 அன்று விராலிமலை, ஜூலை 19 அன்று பொன்னமராவதி, ஜூலை 22 அன்று ஆவுடையார்கோ வில், ஜூலை 23 அன்று மணமேல்குடி, ஜூலை 24 அன்று அறந்தாங்கி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களிலும், ஜூலை 25, 26 ஆகிய நாட்கள் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திலும் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட உள்ளது” என்றார்.