பழனி, செப்.2- கொடைக்கானல் பழனி சாலையில் மண் சரிவு ஏற் பட்டுள்ளது. இதனால் 2 ஆவது நாளாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கொடைக்கானல் சுற்றுலா பயணிகள் சிரமங் களுக்கு ஆளாகினர். கொடைக்கானல் பகுதி யில் தொடர் கனமழையின் காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பழனியிலிருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் 13வது கொண்டை ஊசி வளைவு அருகில் உள்ள சவரிக்காடு என்ற இடத்தில் இந்த மண் சரிவு ஏற்பட்டுள் ளது. நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சாலை யை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஏரா ளமான மண் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர். சாலை சீரமைக்கும் பணி இன்னும் 4 நாட்கள் நீடிக் கும் என கூறப்படுகிறது. இத னால் கொடைக்கானலில் இருந்து பழனி மார்க்கமாக செல்லும் சுற்றுலா பயணி களை வத்தலகுண்டு சாலை வழியாக செல்லுமாறு அறி வுறுத்தப்பட்டுள்ளது.