districts

img

ஹெலிகாப்டர் விபத்தின் போது மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு ராணுவம் நன்றி

நீலகிரியில் ஹெலிகாப்டர் விபத்தின்போது மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு ராணுவம் நன்றி தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தின் ‌போது, மீட்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகள், மக்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி வெலிங்டன் ராணுவ முகாமில் நடந்தது. 

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரு ‌நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர்.

ராணுவ தென் பிராந்திய தலைமை அலுவலர் லெப். ஜெனரல் ஏ.அருண் கலந்துக்கொண்டு, மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி, பேசும் போது, ‘துர்திஷ்டவசமாக விபத்து ஏற்பட்டது. விபத்து ஏற்பட்ட 10 நிமிடங்களில் அப்பகுதி மக்கள் மற்றும் மாவட்ட நிர்வாகமும் துரிதகதியில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். தமிழக முதல்வர், அதிகாரிகளுக்கு உடனடியாக உத்தரவிட்டு மீட்பு பணிகளை முடுக்கி விட்டார். அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக அரசின் துரித நடவடிக்கையால் மீட்பு பணிகளில் எவ்வித இடையூறும் ஏற்படவில்லை. நீலகிரி மாவட்ட மக்கள் ஒத்துழைப்பு  அளித்ததோடு, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கடைகள் அடைத்தனர். எம்.ஆர்.சி ராணுவ வீரர்கள் துரிதமாக செயல்பட்டனர் என்றார்.

;