districts

பார்சலில் விளம்பரம்: உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது? நீதிமன்றம் கேள்வி

நாமக்கல், ஜூன் 14- பார்சலுக்கான கட்டணம் வசூ லித்துவிட்டு, அதில் விளம்பரம் செய் தால் உணவகத்தின் உரிமத்தை ரத்து செய்யக்கூடாது என்று நாமக் கல் நுகர்வோர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் சாலை, பாரதி நகரைச் சேர்ந்தவர்  ஓய்வுபெற்ற ஆசிரியர் சுப்பராயன்  (82). இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு,  மோகனூர் சாலையிலுள்ள பிரபல மான அசைவ உணவகத்தில் (ஹோட்டல் ஜூனியர் குப்பண்ணா)  ரூ.143 செலுத்தி ‘சிக்கன் சூப்’ வாங் கியுள்ளார். அதற்கு வழங்கப்பட்ட ரசீதில் பார்சல் கட்டணம் ரூ.6.50 என குறிப்பிடப்பட்டிருந்துள்ளது. பார்ச லுக்கு தனி கட்டணம் வசூலித்தது உணவகத்தின் நியாயமற்ற வர்த் தக நடைமுறை என்று சுப்பராயன்,  நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தி ருந்தார். இந்த வழக்கை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி வீ.ராமராஜ், உறுப் பினர் ஆர்.ரமோலா ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். அதில், பார்ச லுக்கு கட்டணம் பெற்றுக்கொண்டு, உணவகத்தின் பெயரும் முகவரி யும் அடங்கிய விளம்பரத்துடன் வாடிக்கையாளருக்கு ‘சிக்கன் சூப்’ பார்சல் வழங்கப்பட்டுள்ளது என்பது விசாரணையில் நிரூபிக் கப்பட்டுள்ளது. 

பார்சலுக்கு தனி கட்டணம் வசூ லிக்கும் போது, சொந்த நிறுவனத் தின் விளம்பரத்தை செய்தது உண வகத்தின் நியாயமற்ற வர்த்தக நடைமுறை என்று தீர்ப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது. வாடிக்கையா ளர் பார்சலுக்காக செலுத்திய  ரூ.6.50 மற்றும் வாடிக்கையாள ருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.2 ஆயிரம், செலவுத்  தொகையாக ஆயிரம் ரூபாய் ஆகி யவற்றை வழக்கு தாக்கல் செய்த வருக்கு உணவக நிர்வாகம் நான்கு  வாரங்களுக்குள் வழங்க வேண் டும் என்றும் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், உண வக உரிமையாளர் ஒரு வார காலத் திற்குள் மாவட்ட நுகர்வோர் நீதி மன்றத்தில் ஆஜராகி, பார்சல் கவ ரில் விளம்பரம் செய்தால் பார்சல்  கட்டணம் வசூலிக்க மாட்டோம் என  உறுதி மொழியை வழங்க வேண் டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள் ளது. 

அதேசமயம் நிரூபிக்கப்பட்ட நியாயமற்ற வர்த்தக நடைமுறைக்கு காரணமாக ஏன் உணவாக உரி மத்தை ரத்து செய்யக்கூடாது? என்ப தற்கு சரியான முகாந்திரத்தை வழங்க வேண்டும் என்றும், இதனை  செய்ய தவறினால் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலருக்கு உண வக உரிமத்தை ரத்து செய்ய உத்தர விடப்படும் என்றும் தீர்ப்பில் கூறப் பட்டுள்ளது.