districts

img

கேரளா, தமிழ்நாட்டில் கைவரிசை காட்டிய ஏடிஎம் கொள்ளையர்கள் நாமக்கல் அருகே சுட்டுப் பிடித்த போலீஸ்

நாமக்கல், செப்.27-  கேரளா மற்றும் தமிழகத்தில் ஏடிஎம் மையங்களை குறிவைத்து கொள்ளையடித்த கும்பலை  வெள்ளியன்று நாமக்கல் அருகே தமிழக போலீசார் சுட்டுப்பிடித்தனர். இதில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில்  ஒருவர் பலியானார். 

கேரளம் மாநிலம் திரிச்சூர் பகுதியில் மூன்று ஏடிஎம் மையங்களில் குறிவைத்து பணத்தை கொள்ளையடித்த ஒரு கும்பல் கொள்ளை யடித்த பணத்தோடு கேரளத்தில் இருந்து தமிழ கம் வழியாக தப்ப முயன்றது. இதுகுறித்து தக வல் அறிந்த தமிழ்நாட்டின் சேலம் மற்றும் நாமக்கல் போலீசார், தேசிய நெடுஞ்சாலை வழி யாக அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த கண் டெய்னர் லாரியை குமாரபாளையம் அருகே சுற்றிவளைத்தனர். கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் லாரி சென்றபோது குமார பாளையம் காவல் ஆய்வாளர் தவமணி தலைமையிலான போலீசார் அவர்களை பிடிக்க  முற்பட்டனர். அப்போது, லாரியில் இருந்த கும்பல், கற்களை கொண்டு போலீசாரை தாக்கி னர். இதில், காவல் ஆய்வாளர் தவமணி மற்றும் ரஞ்சித் குமார் என்கிற காவலர் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர், லாரியில் இருந்து 7 பேர் கொண்ட கும்பல் இறங்கி ஓட ஆரம்பித்தது. இதில், 7 பேரில் ஒருவரை போலீசார் சுட்டதில் ஜூமைதீன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

கூகுள் மூலம் கண்டறிந்து கொள்ளை

இதுகுறித்து சேலம் டிஐஜி உமா செய்தியா ளர்களிடம் பேசுகையில், திருச்சூர் எஸ்.பி., அளித்த தகவலின் பேரில் நாமக்கல் மாவட்டம் முழுவதும் கிரிட்டா காரை சோதனை செய்து வந்தோம். பின்னர் கண்டெய்னர் லாரியில் கொள்ளை கும்பல் வருவதாக தெரிவித்த தக வலின் பேரில் வாகனத்தணிக்கை தீவிரப் படுத்தப்பட்டது. சங்ககிரி டோல்கேட் வரை கண் டெய்னர் சென்று விட்டு திரும்ப வந்துள்ளது. அப்போது இதர வாகனங்களை மோதியபடி சென்றது. வாகனத்தின் முகப்பில் 4 பேர் இருந்த னர். வாகனத்தை வெப்படை காவல்நிலை யத்திற்கு கொண்டு செல்லும் போது வாகனத்தின் உள்ளே இருந்து சத்தம் கேட்டது.  கதவை திறந்த போது வாகனத்தில் இருந்து இரண்டு பேர் பையுடன் தப்பிச்செல்ல முயன்ற னர். அப்போது அவர்கள் காவல் ஆய்வாளர் மற்றும் எஸ்ஐ யை தாக்கியதில் ஆய்வாளர் தற்காப்புக்காக சுட்டார். இதில் பணப்பையை கீழே போட்டு விட்டு தப்ப முயன்ற நபரை ஆய் வாளர் காலில் சுட்டு பிடித்தார். ஏடிஎம் மையத்தை  மட்டுமே கொள்ளையடிக்கும் கும்பல்  என தெரிய வந்துள்ளது. காயம்பட்டவர் கோவையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார். 

சொகுசு காரில் வந்த கும்பல் 

சொகுசு காரில் சென்று திருச்சூரில் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். கண்டெய்னரில் 7 பேர் இருந்த னர். கிருஷ்ணகிரி ஏடிஎம் கொள்ளை சம்பவத் தில் இந்த கும்பலுக்கு தொடர்பு உள்ளதா என விசாரணை நடைபெற்று வருகிறது. 7 பேரும் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள். 

நாமக்கல் மாவட்டத்தில் வாகன விபத்து குறித்து விசாரணை முடிவடைந்து கேரளா போலீசாரிடம் அனைவரும் ஒப்படைக்கப்படு வார்கள். தில்லியில் இருந்து சென்னையில் சரக்கு இறக்க கண்டெய்னர் லாரி வந்துள்ளது. அதன் பின்னே கிரிட்டா காரில் சிலர் வந்து கேரளா திருச்சூரில் ஒன்று சேர்கிறார்கள். கிரிட்டா காரில் பணத்தை கொள்ளையடித்து விட்டு மறைவான இடத்தில் கண்டெய்னர் லாரி யில் காரை ஏற்றி அனைவரும் தப்பிச் சென்றுள் ளனர். கேஸ் கட்டிங் மூலம் ஏடிஎம் இயந்தி ரங்களில் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். காற்று வசதிக்காக கண்டெய்னர் லாரியின் அடி யில் ஓட்டை போட்டுள்ளனர். கூகுள் மூலம்  எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரங்களை கண்டறிந்து அதில் அதிக பண புழக்கம் உள்ள மையத்தை இந்த கும்பல் டார்க்கெட் செய்துள்ளனர். என்கவுண்ட்டர் செய்ய வேண்டும் என்கிற திட்டம் ஏதும் இல்லை. கொள்ளை கும்பல் பிடிபட்டது குறித்து திருச்சூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் பல டீம் இருக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார். கொள்ளையர்கள் பிடிபட்ட இடத்தில் கேரள போலீசார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.