நாமக்கல், ஜூலை 4- பள்ளிபாளையத்தில் மேம்பாலப் பணிக்காக போக்குவரத்து மாற்றம் செய்த முதல் நாளிலேயே வாகன ஓட்டி கள் பெரும் தவிப்புக்குள்ளாகினர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யத்தில் சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாலக் கட்டுமானப் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடை பெற்று வருகின்றன. எதிர்வரும் மூன்று மாதத்திற்குள் பணிகள் முழுமையாக நிறைவு பெறுமென நெடுஞ்சாலை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நி லையில், பள்ளிபாளையம் பழைய பாலம் சாலை முதல் பள்ளிபாளையம் நான்கு ரோடு வரை தார்ச்சாலை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணி களுக்காக, பழைய பாலம் முழுமை யாக தடை செய்யப்பட்டு, புதிய பாலத் தின் வழியாக இருபுறமும் வாகனங்கள் சென்று வரும் என நெடுஞ்சாலைத் துறை சார்பில் புதனன்று அறிவிக்கப்பட் டிருந்தது. அதன்படி, வியாழனன்று முதல் புதிய பாலத்தின் வழியாக ஈரோட்டில் இருந்து, பள்ளிபாளையம் வழியாக பல்வேறு வாகனங்கள் சென்று, மீண் டும் பள்ளிபாளையம் வழியாக ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங் களுக்கு சென்று வருகிறது. இந்நிலை யில், மிகக் குறுகலான சாலையில் இரு புறமும் எதிர் எதிர் திசையில் வாகனங் கள் சென்று வருவதால், வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட தூரங்களுக்கு அணிவகுத்து நின்றன.
போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட முதல் நாளி லேயே, போக்குவரத்து நெரிசல் ஏற்பட் டதால், வாகன ஓட்டிகள் பெரும் தவிப் புக்குள்ளாகினர். மேலும், நீண்ட நாட்க ளாக தார்ச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த, பள்ளிபாளையம் நான்கு ரோடு பகுதியிலிருந்து நகராட்சி சாலை வரை வாகனங்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டு, தற்போது வாகனங்கள் சென்று வருகிறது.