districts

img

சிப்காட் அமைக்க எதிர்ப்பு: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், ஜூலை 15- விளை நிலங்களில் சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரி வித்து, 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் நாமக்கல் ஆட்சியர்  அலுவலம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம், வளையபட்டி, அரூர், பரளி, என். புதுப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 820 ஏக்கரில் சிப் காட் அமைக்கப்படும் என  தமிழ்நாடு அரசு  அறிவித்துள்ளது. அதற்கான முயற்சியின் ஒருபகுதியாக, மாவட்ட நிர்வா கம் நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.  இத்திட்டத்திற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரி வித்து தொடர் போரட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நி லையில், சிப்காட் அமைத்தால் விவசாய நிலம் பாதிக்கப்ப டும். எனவே, இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தி 100க்கும்  மேற்பட்ட விவசாயிகள் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின் ஆட்சி யரை சந்தித்து மனு அளித்தனர்.