districts

img

அரசுபள்ளி மாணவிக்கு கொரோனா தொற்று

நாமக்கல், செப்.3-  

எலச்சிபாளையம் ஒன்றியம், மாணிக்கம்பாளையம் அரசி னர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள மாணிக்கம்பாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில், கடந்த 1ஆம் தேதி பள்ளிக்கு வருகை புரிந்த மாணவர்க ளுக்கு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  

இதையடுத்து புதனன்று பரிசோதனை முடிவு வெளியானதில், பத்தாம் வகுப்பு ஏ பிரிவில் பயிலும் மாணவி ஒருவருக்கு,  கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது தெரியவந்துள் ளது. இந்நிலையில், அம்மாணவி வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும், அம்மாணவி பயின்ற வகுப்பறை பூட்டப்பட்டது.

அவருடன் பயின்ற சகமாணவர்கள் வேறு அறைக்கு மாற்றப்பட்ட னர். மாணவிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால்,  பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்க ளுக்கு வியாழனன்று மீண்டும் 2வது முறையாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

;